#IPL ஆரஞ்சு மற்றும் பர்புல் தொப்பிகளை பஞ்சாப், டெல்லி வீரர்கள் வென்று அசத்தல்!
#IPL ஆரஞ்சு மற்றும் பர்புல் தொப்பிகளை பஞ்சாப், டெல்லி வீரர்கள் வென்று அசத்தல்!
By : Pravin kumar
ஐ.பி.எல் 2020 சீசன் ஐக்கிய அரபு அமிரக்ததில் மிகசிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் களம் இறங்கிய டெல்லி அணியில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க டெல்லி அணிக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை. அதே போல் இறுதி போட்டியில் 156 என்ற எளிய இலக்கை வலுவான மும்பை அணிக்கு நிர்ணயித்தது டெல்லி அணி. அதை மும்பை எளிதில் அடித்து ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது.
ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் வீரர்களுக்கு விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு ஆரஞ்சு கேப் மற்றும் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களுக்கு பர்புல் கேப் வழங்கப்படும் நிலையில் இந்த சீசனில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல் ராகுல் முதல் இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ராபாடா முதல் இடம் பிடித்து பர்புல் தொப்பியை வென்றார்.