நான்காவது டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக இந்த வீரர் விளையாடுவார் ரஹானே நம்பிக்கை!
நான்காவது டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக இந்த வீரர் விளையாடுவார் ரஹானே நம்பிக்கை!

By : Pravin kumar

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆஸ்திரேலிய வீரரான புகோவிஸ்கியின் இரண்டு கேட்ச்களை தவறவிட்டார் ரிஷப் பண்ட். இதனால் பல விமர்சனங்களை ரிஷப் பண்ட் சந்தித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 97 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய கேப்டன் ரஹானே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். அப்போது ராஹானே “ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினார். இவர் தற்போது நலமாக இருக்கிறார். இவர் கண்டிப்பாக பிரிஸ்பேனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்” என்று நம்பிக்கையாக கூறியிருக்கிறார்.
