Kathir News
Begin typing your search above and press return to search.

நடராஜன் மற்றும் சுந்தர் இருவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட காரணத்தை வெளியிட்ட ரஹானே.!

நடராஜன் மற்றும் சுந்தர் இருவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட காரணத்தை வெளியிட்ட ரஹானே.!

நடராஜன் மற்றும் சுந்தர் இருவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட காரணத்தை வெளியிட்ட ரஹானே.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  15 Jan 2021 4:36 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி தற்போது பிரிஸ்பன் மைதானத்தில் இன்று 15ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்ட இந்திய வீரர்களான அஸ்வின், விகாரி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் உள்ள மாற்றங்களை டாஸ் நிகழ்விற்கு பிறகு தெரிவித்த ரஹானே இந்திய அணியில் காயமடைந்த 4 வீரர்களுக்கு பதிலாக அகர்வால், சுந்தர், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் விளையாடுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்திய அணியின் இந்த மாற்றங்கள் குறித்து பேசிய அவர் : அணியில் இந்த மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இந்த மாற்றம் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கான மாற்றம் என நான் கருதுகிறேன்.

இந்த போட்டியை சிறப்பாக தொடங்க விரும்புகிறோம். இந்த போட்டியில் அறிமுகமாகியுள்ள நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டுக்காக ஷாட்டர் பார்மட் கிரிக்கெட்டில் அசத்தியவர்கள். அதனால் அவர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி இது அவர்களுக்கான முக்கிய போட்டி. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஆட்டத்தை நன்றாக அனுபவித்து விளையாடி அதன் மூலம் ஒரு நல்லதொரு தொடக்கத்தை பெற விரும்புகிறோம் என டாஸின் போது கேப்டன் ரஹானே தெரிவித்தார்.

இந்த போட்டி சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோருக்கு அறிமுக போட்டியாகும். சைனி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு இரண்டாவது போட்டியாகவும், சிராஜ்க்கு மூன்றாவது போட்டி ஆகும். எனவே இந்தியனின் பவுலர்கள் மொத்தமும் வெறும் 3 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடிய அறிமுக வீரர்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News