Kathir News
Begin typing your search above and press return to search.

IPL போட்டியிலிருந்து ராகுல் விலகுகிறாரா? இதுதான் முக்கிய காரணமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகும் கே.எல் ராகுல்.

IPL போட்டியிலிருந்து ராகுல் விலகுகிறாரா? இதுதான் முக்கிய காரணமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 May 2023 6:06 AM GMT

KS ராகுலால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இனி தொடர்ந்து விளையாட முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். குறிப்பாக அவரால் மற்றவர்களின் உதவியுடன் தான் நடக்க முடியும் ஒரு சூழலுக்கு சென்று இருக்கிறார். குறிப்பாக அவருடைய காலில் காயம் ஏற்பட்டு இருப்பதன் காரணமாக இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கு மாட்டார் என்று கூறப்பட்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன் லக்னோ அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடியது.


அப்போது ஆர்சிபி அணியின் பேட்டிங்கின் போது டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க லக்னோ அணியின் கேப்டன் KS ராகுல் தீவிரமாக முயற்சி செய்தார். இவருடைய இந்த தீவிர முயற்சியின் காரணமாக திடீரென்று அவருடைய காலில் கடுமையான காயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஒரு காயம் காரணமாக அவரால் விழுந்து நடக்க முடியாமல் மற்றவர்களின் துணையுடன் நடக்கக்கூடிய ஒரு நிலைமைக்கு சென்று இருக்கிறார். இதன் காரணமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக க்ருனால் பாண்டியா பொறுப்பேற்று கொண்டார்.


இதன் காரணமாக கே.எஸ் ராகுலுக்கு மும்பையில் உள்ள கேன் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால், அவர் குணமடைய வெகு நாட்களாகும் என்று கூறப்படுகிறது. ராகுலின் காயத்தின் தன்மையையும், இந்திய கிரிக்கெட் அகாடமி மருத்துவக் குழு மற்றும் பி.சி.சி.ஐ நிர்வாகிகள் கண்காணித்து வருகின்றனர்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News