Kathir News
Begin typing your search above and press return to search.

கிரிக்கெட்டில் இருந்து முக்கிய வீரர்கள் ஓய்வா? ரோகித் சர்மா கூறியது என்ன?

T20 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வு பெறுகிறார்களா?

கிரிக்கெட்டில் இருந்து முக்கிய வீரர்கள் ஓய்வா? ரோகித் சர்மா கூறியது என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Jan 2023 2:47 AM GMT

இலங்கை அணி உடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா இனி டி20 கிரிக்கெட்டில் சீனியர் வீரர்கள் விளையாட மாட்டார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு தற்போது பதில் அளித்து இருக்கிறார். இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது தொடங்கி இருக்கிறது. இதில் இந்தியா கட்டாயம் வெற்றி ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் இருக்கிறது.


டி20 தொடரில் தலைமையில் வென்ற சூழ்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்டிற்கு கேப்டன் ரோகித் சர்மா அணிக்குள் தற்போது இணைந்து இருக்கிறார். இதுபோல கோலி போன்று மற்ற சீனியர் வீரர்களும் அணிக்குள் தற்பொழுது நுழைந்து இருக்கிறார்கள். இந்த மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி வந்தது. அதற்கு ஏற்றது போல விராட் கோலி, ரோஹித் சர்மா, முகமது சாமி போன்ற வீரர்கள் ஓய்வு தரப்பட்டு இருக்கிறது.


இனி அவர்கள் டி20க்கு வரவே மாட்டார்கள் என்று குழப்பத்தின் ரசிகர்கள் இருந்தார்கள். இது குறித்து ரோகித் சர்மா தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் மூன்று வடிவ போட்டிகளில் அடுத்தடுத்து எப்படி விளையாட முடியும். ஓய்வு தேவை என்பதால் தான் தற்போது விளக்கி இருக்கிறோம். அதனால் டி20க்களின் விளையாட மாட்டேன் என்றெல்லாம் கூற முடியாது என கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News