Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். ஏலம் முடிந்தது: இந்திய அணிக்காக விளையாடுவதற்கு கவனம் செலுத்துங்கள்: ரோகித் சர்மா!

ஐ.பி.எல். ஏலம் முடிந்தது: இந்திய அணிக்காக விளையாடுவதற்கு கவனம் செலுத்துங்கள்: ரோகித் சர்மா!

ThangaveluBy : Thangavelu

  |  16 Feb 2022 7:29 AM GMT

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். இரண்டு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3.0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. அடுத்து மூன்று ஒருநாள் போட்டி தொடர் உள்ளது.

இந்நிலையில், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதல் 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் லைவ் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டி ஏலம் முடிந்து விட்டது. இனிமேல் இந்திய அணிக்காக விளையாடுவதில் அனைவரும் கவனம் செலுத்துங்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார். 15 வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் சில வீரர்கள் அதிகப்படியான விலைக்கு போயுள்ளனர். சிலர் குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். எனவே இதில் சில ஏற்றத்தாழ்வு மனப்பான்மை உருவாக வாய்ப்புள்ளது. இதனை அனைத்தும் ஓரங்கட்டிவிட்டு இந்திய அணிக்காக விளையாட கவனம் செலுத்துங்கள் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Source: Maalaimalar

Image Courtesy: The New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News