Kathir News
Begin typing your search above and press return to search.

வங்காளத்திற்கு எதிராக இந்தியா தோல்வி: முக்கிய காரணம் யார் பரபரப்பு குற்றச்சாட்டு?

வங்காளத்திற்கு எதிரான இந்திய தோல்விக்காக BCCI மீது ரோகித் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டு.

வங்காளத்திற்கு எதிராக இந்தியா தோல்வி: முக்கிய காரணம் யார் பரபரப்பு குற்றச்சாட்டு?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Dec 2022 5:07 AM GMT

வங்காளத்திற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா காயின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் விளையாடவில்லை. இது போன்று தீபக்சாகர் காயம் காரணமாக வெறும் மூன்று ஓவர்கள் மட்டுமே விளையாடினார். எனினும் இருவரும் காயத்தை பொருட்படுத்தாமல் பேட்டிங்க்கு வந்து விளையாடினார்கள். அதில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் விளையாடி சாதனைப் படுத்துகிறார்.


இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, அவர்கள் தனக்கு விரலில் எலும்பு முறிவு ஏதுமில்லை. அதனால்தான் பேட்டிங் செய்ய வந்தேன். நீங்கள் ஒரு போட்டியில் தோல்வியில் தழுவினால் அதில் நல்ல விஷயங்கள் இருக்கும். சாதகமான விஷயங்களும் இருக்கும், 61 ரன்களை ஆரம்பிக்கும் போது இறுதியில் வீழ்த்திய பிறகு 270 ரன்கள் அடிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய தவறு.


எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் போட்டியின் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசுகிறோம். ஆனால் மிடில் ஓவர்களில் கடைசி கட்டத்தில் பந்துவீச்சாளர்கள் வாரி வழங்குவார்கள் இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். குறிப்பாக வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்க முடியாத அவர்களுக்கு பணி சுமையையும் நான் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். இந்திய அணிக்கு தோல்வியை தழுவும் நிலை ஏற்படுகிறது. இதனால் உடல் முழு உடல் தகுதி பெற்ற வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே BCCI மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் கேப்டன் அவர்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News