Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி கருத்து !

புதிய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி கருத்து !

DhivakarBy : Dhivakar

  |  10 Dec 2021 5:35 PM GMT

இந்திய இருவது ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

அணியில் நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்த நான் விரும்புகிறேன். 10 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழக்கும் சூழ்நிலையில் எப்படி விளையாடவேண்டும் என்பதற்கு தயார்படுத்த விரும்புகிறேன்.

அணி தொடக்கத்தில் தடுமாறும்போது 3, 4, 5, 6 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் வீரர்கள் அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அடுத்து நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு சில ஆட்டங்கள் உள்ளன. அதை சோதித்து பார்க்க வேண்டும்.

Maalaimalar

Image :opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News