Kathir News
Begin typing your search above and press return to search.

என் மகனின் ஆட்டத்தை நான் பார்க்காததற்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்..

அர்ஜுன் டெண்டுல்கர் ஆட்டத்தை நான் பார்க்காததற்கு காரணம் இதுதான் என மனம் திறந்து சச்சின் டெண்டுல்கர்.

என் மகனின் ஆட்டத்தை நான் பார்க்காததற்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Jun 2023 6:00 AM GMT

அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் செய்யப்பட்டார். சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய அர்ஜுன் டெண்டுல்கர், அதன்பின்னர் மீண்டும் பெஞ்ச் செய்யப்பட்டார். இவர் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தாலும், ஒரு சிலர் அவருடைய வேகத்தை பற்றி குறை சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமான முதல் போட்டியில் முதல் ஓவரை வீசிய போது, அனைத்து கேமராக்களும் சச்சின் டெண்டுல்கர் முகத்தையே தேடின.


ஆனால் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மகனின் முதல் ஆட்டத்தின் போது ஓய்வறைக்கு சென்று இருக்கிறார். இதனால் அர்ஜுன் டெண்டுல்கரின் அக்காவான சாரா டெண்டுல்கர் பக்கம் கேமராக்கள் திரும்பின. இதன் காரணமாக ஏன் தன்னுடைய மகனின் முதல் ஆட்டத்தின் பொழுது ஏன் தன்னுடைய மகனின் முதல் ஆட்டத்தின் போது சச்சின் டெண்டுல்கர் பார்க்கவில்லை என்று ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.


அந்த கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். என்னுடைய சிறு வயதில் நான் முதன் முதலாக விளையாட களத்தில் இருக்கும் பொழுது என்னுடைய பெற்றோர்கள் அதை பார்ப்பதற்கு ஆவலாக இருந்தார்கள். எனவே எனக்கு அழுத்தம் ஏற்பட்டது அதன் காரணமாக நான் சரியாக விளையாட முடியவில்லை. எனவே இந்த அழுத்தத்தை என்னுடைய மகனுக்கு கொடுக்க விரும்பவில்லை, அதனால் ஓய்வறைக்கு சென்று விட்டேன் என கூறினார்.

Input & Image courtesy: News l

Next Story
கதிர் தொகுப்பு
Trending News