Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சச்சின் டெண்டுல்கர்.!

மருத்துவர்களின் அறிவுரையின் படி கடந்த ஏப்ரல் 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சச்சின் டெண்டுல்கர்.!

ThangaveluBy : Thangavelu

  |  8 April 2021 2:13 PM GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீடு திரும்பினார். சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.





கடந்த மாதம் மார்ச் 27ம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இதனிடையே மருத்துவர்களின் அறிவுரையின் படி கடந்த ஏப்ரல் 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




இதனிடையே இன்று பூரணம் குணமடைந்து சச்சின் வீடு திரும்பினார். சச்சின் வீடு திரும்பியதால் அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News