Kathir News
Begin typing your search above and press return to search.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதலாவது ஆட்டம் செஞ்சூரியனில் தொடங்கியது.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  1 Jan 2022 8:32 AM GMT

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதலாவது ஆட்டம் செஞ்சூரியனில் தொடங்கியது.

இப்போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், போட்டியில் இந்திய அணி பந்து வீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வாங்கும் சம்பளத்தில் இருந்து வீரர்களுக்கு 20 சதவீதமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உலக டெஸ்ட் போட்டியில் ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News