Kathir News
Begin typing your search above and press return to search.

கிரிக்கெட் போட்டியின் வரலாற்றை மாற்றுவோம் - இந்திய கேப்டன் ரோகித் சர்மா!

தென் ஆப்பிரிக்கா உடனான போட்டியில் இந்தியா வென்றது இல்லை என்ற வரலாற்றை மாற்றுவோம் இந்திய கேப்டன்.

கிரிக்கெட் போட்டியின் வரலாற்றை மாற்றுவோம் - இந்திய கேப்டன் ரோகித் சர்மா!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Oct 2022 4:20 AM GMT

தென்னாப்பிரிக்கா அணியுடன் ஆன கிரிக்கெட் போட்டி 20 ஓவர் தொடரில் இரண்டு ஆட்டங்களை இந்தியா எதிர்கொண்டு உள்ளது. இங்கு இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது மற்றும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. எனவே இதுவரை இந்தியா தென்னாப்பிரிக்கா அணியை வென்றது இல்லை என்ற வரலாறு இருந்து வருகிறது. இந்த வரலாற்றை மாற்றுவோம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் கூறியிருக்கிறார்.


இந்த நிலையில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசியது. பந்துவீச்சில் முதலில் சில விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி நிர்ணயிக்கும் இலக்கை வெற்றிகரமாக வெட்டுவோம் என்று இந்திய கேப்டன் கூறி இருக்கிறார் ஆடுகளம் தொடர்ந்து பேசி ரோகித் சர்மா தங்களுக்கும் பந்துவீச்சு தான் இருந்தோம் ஆடுகளும் சற்று தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. பந்து பேட்டிற்கு வருவதில் சிறிது தூரம் இருந்து வருகிறது.


இதனால் முதல் விக்கெட் இழந்து விடாமல் ரன்களை குவிக்க வேண்டியது கட்டாயம். எங்கள் அணியில் இன்று மாற்றம் இல்லை. தென்னாப்பிரிக்காவுடன் டி20 தொடரை சொந்த மண்ணில் நாங்கள் வென்றது இல்லை. அதற்கு தற்போது நல்ல வாய்ப்பாக இது கிடைத்துள்ளது. இன்றைய ஆட்டம் எங்களுக்கு சவாலாக இருக்கும் என்று கூறினார். மேலும் இன்றைய ஆட்டத்தில் முகமது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News