Begin typing your search above and press return to search.
" பாகிஸ்தானுக்கு நெருக்கடி" எச்சரிக்கும் கவுதம் காம்பீர் !
Sports News.

By : Pradeep Gunasekaran
20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான் அணிக்கு அதிகமான நெருக்கடி உள்ளது என்று முன்னாள் தொடக்க வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ''தற்போதுள்ள நிலைமையில் இந்திய அணி மிகவும் பலம் பெற்று திகழ்கிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு அதிகமான நெருக்கடி உள்ளது. உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் 5 முறை தோற்றுள்ளது. இந்த நெருக்கடியில் அந்த அணி விளையாட வேண்டிய நிலை இருக்கிறது'' என்றார்.
Image : Cricket Tracker
Next Story
