Kathir News
Begin typing your search above and press return to search.

2வது டெஸ்ட் போட்டி: இலங்கை முதல் இன்னிங்சில் 378 ரன்னில் ஆல் அவுட்!

2வது டெஸ்ட் போட்டி: இலங்கை முதல் இன்னிங்சில் 378 ரன்னில் ஆல் அவுட்!

ThangaveluBy : Thangavelu

  |  25 July 2022 11:17 AM GMT

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 24) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கருணரத்னே உள்ளிட்டோர் களமிறங்கினர். இரண்டு பேரும் மிகவும் நிதானமுடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

மேலும் நிதானமுடன் விளையாடி பெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டத்தை இழந்தார். அவர்களை தொடர்ந்து கருணரத்னே 40 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து விளையாடிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். அவரும் சண்டிமாலும் இணைந்து மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மேத்யூஸ் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்த சண்டிமால் 80 ரன்னில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேரத்தின் முடிவின்படி 6 விக்கெட் இழந்து 315 ரன்களை எடுத்தது. அதற்கு அடுத்த இரண்டாவது நாளான இன்று (ஜூலை 25) மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 378 ரன்களில் ஆல்அவுட்டானது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News