பிபிஎலில் விளையாடியது இந்த போட்டியில் தொடக்க வீரர் களம் இறங்க உதவியது ஸ்டோனிஸ் கருத்து.!
பிபிஎலில் விளையாடியது இந்த போட்டியில் தொடக்க வீரர் களம் இறங்க உதவியது ஸ்டோனிஸ் கருத்து.!

By : Pravin kumar
ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றி பெற்று மும்பை அணி இறுதி போட்டிக்கு சென்றது. இந்நிலையில் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய டெல்லி அணியில் தவண் மற்றும் ஸ்டோனிஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஸ்டோனிஸ் 38 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 21 ரன்னில் பெவுலியன் திரும்ப அடுத்து வந்த ஹெட்மயர் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினர். தவண் 78 ரன்னில் அவுட் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் ஸ்டாய்னிஸ் கூறுகையில் : ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிபிஎல் தொடரில் நான் இரண்டு சீசன்களில் ஓபனிங் செய்துள்ளேன். அதனால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது சிறப்பாக கைகொடுத்தது. இதுபோன்று சீக்கிரமாக பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்போது துவக்கத்திலேயே என்னால் எளிதாக பேட்டிங் செய்ய முடியும். நான் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் இதுவே எனது முதல் ஃபைனல்.
