Kathir News
Begin typing your search above and press return to search.

வெற்றி கிடைத்தது, ஆனால் இதை செய்யத் தவறிவிட்டேன்: சூரியகுமார் கூறியது எதை?

கடந்த ஆட்டங்களின் போது நான் இதை செய்ய தவற விட்டதால் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டு இருந்தது.

வெற்றி கிடைத்தது, ஆனால் இதை செய்யத் தவறிவிட்டேன்: சூரியகுமார் கூறியது எதை?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 May 2023 1:30 AM GMT

ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் நேற்றைய ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை இந்த ஒரு போட்டியில் கொடுத்து இருக்கிறார் என்று கூறலாம். அந்த அளவிற்கு அவருடைய ஆட்டம் மிகவும் அற்புதமாகவும் அட்டகாசமாகவும் இருந்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணியை மும்பை அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த ஒரு வெற்றிக்குப் பிறகு சூரியகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தில் நான் இதை செய்ய தவறிவிட்டேன் என்று கூறினார்.


கடந்த ஆட்டத்திலும் இதைத் தவறை நான் செய்து விட்டேன். சேசிங் செய்யும் போது அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும். நான் இன்று பெரியதாக ஏதும் விளையாடவில்லை. இஷான் கிஷன் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு துணையாக மட்டும்தான் நின்றேன். இது போன்ற சூழலுக்காக நான் என்னையே தயார் படுத்திக் கொண்டிருந்தேன். ரன் எடுப்பதில் நான் முமரமாக ஈடுபடவில்லை என்று கூறியிருக்கிறார்.


ஒரு ஓவரில் 12 முதல் 14 ரன்கள் அடித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற பட்சத்தில் எந்த ஷாட்டுகளை ஆடலாம் என்பது குறித்து யோசிப்பேன். நான் நேர சந்தர்ப்பம் பார்த்து தான் ஷார்ட்டுகளை எடுப்பதற்கு முயற்சி செய்வேன். அதே மாதிரி செய்யும் பட்சத்தில் உடன் இருக்கும் வீரரும் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதன் காரணமாக எங்கள் அணி வெற்றி பெற்று இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News