Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகினார் சூர்யாகுமார் யாதவ்: என்ன காரணம் தெரியுமா!

ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகினார் சூர்யாகுமார் யாதவ்: என்ன காரணம் தெரியுமா!

ThangaveluBy : Thangavelu

  |  10 May 2022 8:37 AM GMT

நடப்பு ஐ.பி.எல். 2022 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 8 ஆட்டங்களில் விளையாடி 3 அரைசதத்துடன் 303 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சூர்யாகுமார் யாதவ் இடதுகையில் தசைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்போட்டியின் மீதம் ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 6ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவ் காயமடைந்தார்.

இதனிடையே அவரது உடல் நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உடல் பரிசோதனை செய்யும் நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை அணி நிர்வாகம், அவரை விடுவித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

Source: Malaimalar

Image Courtesy:Cricket Tip Master

Next Story
கதிர் தொகுப்பு
Trending News