Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா இலங்கை இடையிலான மூன்று ஒரு நாள் தொடர்: இந்தியாவிற்கு வெற்றி கிடைக்குமா?

இந்தியா-இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி நடை பெறுகிறது.

இந்தியா இலங்கை இடையிலான மூன்று ஒரு நாள் தொடர்: இந்தியாவிற்கு வெற்றி கிடைக்குமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Jan 2023 1:02 AM GMT

மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் முடிவடைந்த பிறகு, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளன. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டி கவுகாத்தியில் நடைபெறும், அடுத்த இரண்டு போட்டிகள் கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் ஜனவரி 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்தியாவின் கடைசி இருதரப்பு தொடர்களை தவறவிட்ட இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அணியை வழிநடத்துவார்.


ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜஸ்பிரித் பும்ராவும் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா செப்டம்பர் 2022 முதல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். இந்தியா கடைசியாக ஜூலை 2021 இல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடியது.


T20 தொடரில் இந்தியா வெற்றி அடைந்ததை தொடர்ந்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்தியா கட்டாயம் வெற்றிபெறும் என்று ரசிகர்களின் தரப்பில் பெரும் எதிர்பார்ப்பு எழுதி இருக்கிறது மேலும் இந்திய ரசிகர்கள் தற்பொழுது முக்கிய நட்சத்திர வீரர்கள் இந்த ஒரு ஆட்டத்தில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்ப்பில் தான் இருக்கிறார்கள் அவர்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய வீரர்கள் இந்த ஆட்டத்தில் இடம் பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Input & Image courtesy: Sports News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News