Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அணியின் இந்த நிலைமைக்கு இதுதான் காரணம் என ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கருத்து.!

இந்திய அணியின் இந்த நிலைமைக்கு இதுதான் காரணம் என ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கருத்து.!

இந்திய அணியின் இந்த நிலைமைக்கு இதுதான் காரணம் என ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கருத்து.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  14 Jan 2021 7:29 PM IST

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த சில தினங்களில் உள்ள துவங்க உள்ள நிலையில், இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல முடியுமா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இது குறித்தான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஜஸ்டின் லங்கர் பேசுகையில், “ஐபிஎல் எனக்கு பிடித்தமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று. அதை இளம் வீரர்கள் கிரிக்கெட்டில் தங்களை மெருகேற்றிக் கொள்ள உதவும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளோடு நான் ஒப்பிட்டு பார்க்கிறேன். குறிப்பாக ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்டில் ஐபிஎல் வேற லெவல். அதே நேரத்தில் கொரோனா தொற்றினால் சர்வதேச கிரிக்கெட் தொடர் முடக்கியிருந்த சூழலில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது சரியான நேரம் இல்லையோ என யோசிக்க தூண்டுகிறது. தொடர்ச்சியாக இந்த சீசனில் வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு ஐபிஎல் காரணமாக இருக்குமோ எனவும் யோசிக்க தூண்டுகிறது. இதை நாம் பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News