Kathir News
Begin typing your search above and press return to search.

ஆட்டநாயகன் விருது என்னை விட இந்த வீரருக்கு தான் சேர வேண்டும் ஹர்டிக் பாண்டியா அதிரடி.!

ஆட்டநாயகன் விருது என்னை விட இந்த வீரருக்கு தான் சேர வேண்டும் ஹர்டிக் பாண்டியா அதிரடி.!

ஆட்டநாயகன் விருது என்னை விட இந்த வீரருக்கு தான் சேர வேண்டும் ஹர்டிக் பாண்டியா அதிரடி.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  7 Dec 2020 2:38 PM IST


ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டி-20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் பின்ச், ஆகர், ஸ்டார்க் என முக்கிய வீரர்கள் இந்த போட்டியில் விளையாடாத நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு மெத்திவ் வேட் கேப்டனாக இந்த போட்டியில் வழிநடத்தினார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் 58 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டோய்னிஸ் 16* ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 194 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 30 ரன்களும், ஷிகர் தவான் 52 ரன்களும் எடுத்து கொடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடுத்தடுத்து வந்த சஞ்சு சாம்சன் 15 ரன்களும், விராட் கோஹ்லி 40 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.

முன்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் ஓரளவிற்கு ரன் எடுத்து கொடுத்திருந்தாலும், யாரும் அதிரடியாக விளையாடாததால் கடைசி ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நேரத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்களுடனும், ஸ்ரேயஸ் ஐயர் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றியின் மூலம் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “இது சாதாரணமான விசயம் தான். ஸ்கோர்கார்ட்டை பார்த்து கொண்டு விளையாட நினைத்தேன், அப்பொழுது தான் எந்த பந்துவீச்சாளரை டார்கெட் செய்து அடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியும். நான் இது போன்று பல சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறேன், இக்கட்டான சூழ்நிலைகளில் நான் செய்த தவறுகளில் இருந்து தான் பல விசயங்களை கற்றுள்ளேன்.

ஆஸ்திரேலிய வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இந்த நேரத்தில் நடராஜனை பற்றி பேசியே ஆக வேண்டும், அவர் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் இன்றைய திணறிய போதிலும் நடராஜன் மட்டுமே மிகசிறப்பாக செயல்பட்டார்” என்றார் ஹர்திக் பாண்டியா.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News