Kathir News
Begin typing your search above and press return to search.

டி-20 தொடரை ஆஸ்திரேலியாவில் வென்று அசத்திய இந்திய அணி.!

டி-20 தொடரை ஆஸ்திரேலியாவில் வென்று அசத்திய இந்திய அணி.!

டி-20 தொடரை ஆஸ்திரேலியாவில் வென்று அசத்திய இந்திய அணி.!

Pravin kumarBy : Pravin kumar

  |  9 Dec 2020 1:29 PM GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்று விட்ட நிலையில் மூன்றாவது டி-20 போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் பின்ச் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க மேத்திவ் வேட் 80 ரன்களும் மேக்ஸ்வேல் 54 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணியில் கே.எல். ராகுல் டக்அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் கோலி நிலைத்து விளையாடி அரைசதம் விளாசினார். ஷிகர் தவன் 24 ரன்களும் பாண்டியா 20 ரன்களும் அடிக்க ஷ்ரெயர்ஸ் ஐயர் டக் அவுட் ஆக இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் தொடர் நாயகன் விருது ஹர்டிக் பாண்டியா வென்று அசத்தினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News