Kathir News
Begin typing your search above and press return to search.

2வது நாள் உணவு இடைவேளை இந்தியா 339 ரன்கள்!

2வது நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே மோதுகின்ற முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று (நவம்பர் 25) தொடங்கியது.

2வது நாள் உணவு இடைவேளை இந்தியா 339 ரன்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  26 Nov 2021 7:41 AM GMT

2வது நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே மோதுகின்ற முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று (நவம்பர் 25) தொடங்கியது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு சுமார் 258 ரன்களை குவித்தது. 2வது நாளான இன்று (நவம்பர் 25) ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய அறிமுக டெஸ்ட் விளையாட்டில் சதமடித்தார். அதாவது ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களிலும், ஜடேஜா 50 ரன்களிலும் அவுட்டானார்கள்.

மேலும் விருத்திமான் சாஹா, அக்சர் படேல் இரண்டு பேரும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்தனர். 2வது நாள் இன்று உணவு இடைவேளையில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News