Kathir News
Begin typing your search above and press return to search.

2021 டி-20 உலககோப்பையில் நடராஜன் விளையாடுவார் வீராட் கோலி நம்பிக்கை.!

2021 டி-20 உலககோப்பையில் நடராஜன் விளையாடுவார் வீராட் கோலி நம்பிக்கை.!

2021 டி-20 உலககோப்பையில் நடராஜன் விளையாடுவார் வீராட் கோலி நம்பிக்கை.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  9 Dec 2020 6:49 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்று விட்ட நிலையில் மூன்றாவது டி-20 போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் பின்ச் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க மேத்திவ் வேட் 80 ரன்களும் மேக்ஸ்வேல் 54 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணியில் கே.எல். ராகுல் டக்அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் கோலி நிலைத்து விளையாடி அரைசதம் விளாசினார். ஷிகர் தவன் 24 ரன்களும் பாண்டியா 20 ரன்களும் அடிக்க ஷ்ரெயர்ஸ் ஐயர் டக் அவுட் ஆக இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் தொடர் நாயகன் விருது ஹர்டிக் பாண்டியா வென்று அசத்தினார்.

கோலியின் இந்த பேட்டி மூலம் இனிவரும் தொடர்களில் நடராஜன் நிச்சயம் பெறுவார் என்று என்பது உறுதியாகி உள்ளது. ஏனெனில் கோலி ஒருவரின் மீது நம்பிக்கை வைத்து அவரை பாராட்டி பேச ஆரம்பித்தால் நிச்சயம் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குவார் அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்ததை நேரில் கண்டதாலே கோலி அவருக்கு வாய்ப்பளித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோலியின் இந்தப் பேட்டியின் ஆல் நிச்சயம்நடராஜன் இனிவரும் டி20 தொடர்களில் மட்டுமின்றி உலக கோப்பை டி20 தொடரிலும் நடராஜன் இடம் உறுதியாகும் என்பது தெளிவாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்று கனவுகளை சுமந்து ஆஸ்திரேலிய சென்ற நடராஜன் இப்போது உலகமே வியந்து பார்க்கும் பவுலராக மாறியிருப்பது நம் அனைவர்க்குமே மகிழ்ச்சி தான்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News