Kathir News
Begin typing your search above and press return to search.

மகளின் புகைப்படத்தை வெளியிடாதீர்கள்: விராட் கோலி வேண்டுகோள்!

மகளின் புகைப்படத்தை வெளியிடாதீர்கள்: விராட் கோலி வேண்டுகோள்!

ThangaveluBy : Thangavelu

  |  24 Jan 2022 1:08 PM GMT

தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாடி வந்தது. அந்த சமயத்தில் தனது மகளின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து அதனை வெளியிடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது சமூக வலைதளம் மூலமாக உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார்.

இதனிடையே தென்னாப்பிரிக்கா போட்டியின்போது, விராட் கோலி 25வது ஓவரில் அரை சதம் எடுத்தார். அந்த சமயத்தில் மைதானத்தில் பால்கனியில் இருந்த குழந்தை வாமிகாவுடன் இருந்த அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதம் அர்ப்பணிப்பதாக சைகை செய்தார். அதற்கு அனுஷ்காவும் பதில் அளிக்கும் விதத்தில் கையசைத்தார். இந்த சம்பவம் தொலைக்காட்சியின் படம் பிடித்தனர். இது சில நிமிடங்களில் இணையத்தில் வைரலானது. அதாவது விராட் கோலியின் மகள் புகைப்படம் இதுவரை வெளியானது இல்லை. முதன் முறையாக அவரது ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக பார்த்ததில் சந்தோஷப்பட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது வாமிகாவின் புகைப்படத்தை அவளது அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம். அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எனவே வாமிகாவின் புகைப்படம் தொலைக்காட்சியில் தெரியாமல் பதிவாகிவிட்டது. எனவே தயது செய்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News