Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். தொடரின் இந்த ஆண்டுக்கான கேப்டன் யார்? வீரேந்திர சேவாக் தகவல்!

ஐ.பி.எல். தொடரின் இந்த ஆண்டுக்கான கேப்டன் யார்? வீரேந்திர சேவாக் தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  24 May 2022 2:53 PM GMT

15வது ஐ.பி.எல். தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று இன்று (மே 24) மாலை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கிறது.

இப்போட்டியில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட சி.எஸ்.கே. அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசி 2 இடங்களை பெற்று வெளியேறியது. குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு அணிகள் குவாலியஃபயருக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் சிறந்த கேப்டன் ஹர்த்திக் பாண்டியாதான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது ஹர்த்திக் பாண்டியா தான். அவருக்கு இப்படி ஒரு தலைமை பண்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஒருவருக்கு கேப்டனின் தலைமை பண்பு நம்மை கவர்ந்து இழுக்கும். போட்டியின் இக்கட்டான நேரங்களில் அவர் எடுக்கும் முடிவுகளில்தான். குறிப்பாக ஒரு அணி பந்துவீசி கொண்டிருக்கும்போது, நாம் பீல்டிங்கையும், பந்துவீச்சையும் எதிரணிக்கு தகுந்தாற்போன்று மாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் சிறந்த பலன் கிடைக்கும். இவ்வாறு சேவாக் கூறினார்.

Source,Image Courtesy Malaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News