Kathir News
Begin typing your search above and press return to search.

இது தானா சேர்ந்த கூட்டம்... டோனியின் ரசிகர்களால் ஏற்படுத்திய ஆரவாரம்!

சென்னை அணி தற்போதைய முன்பை விட அதிகமாக பலத்துடன் வலிமையுடன் களம் இறங்கி இருக்கிறது.

இது தானா சேர்ந்த கூட்டம்... டோனியின் ரசிகர்களால் ஏற்படுத்திய ஆரவாரம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 April 2023 2:28 AM GMT

ஐ.பி.எல் இன் 16வது கிரிக்கெட் போடி மும்பை உள்ள ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சென்னை அணியின் கேப்டன் டோனி அவர்கள் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றார். குறிப்பாக சென்னை அணி மற்றும் மும்பை அணி இடையிலான பலப்பரிட்சை நேற்று நடைபெற்றது. இதில் சென்னை அணி தன்னுடைய இரண்டாவது வெற்றியை பெற்று இருக்கிறது. டாஸ்க் ஜெயித்த சென்னை அணி பில்டிங்கை தேர்வு செய்து இருந்தது, பல்வேறு வீரர்கள் முழு பயிற்சியுடன் களம் இறங்கி இருக்கிறார்கள் என்பது ஆட்டத்தில் தெரியவந்தது.


இதனிடையே நேற்றைய ஆட்டத்தின் போது சென்னை அணி வெற்றிக்கு அருகே வந்த போது, திடீரென ஒட்டுமொத்த வான்கடே மைதானமும் தோனி, தோனி, தோனி என்று ஒரே குரலில் ஒலி எழுப்பி அதிர வைத்தது. சென்னை அணி வெற்றிக்கான நேரத்தில் ஓடிக்கொண்டிருந்தது குறிப்பாக 151 ரன்கள் எடுத்த பொழுது ஓய்வறையில் இருந்த டோனி திடீரென்று தன்னுடைய இரு கால்களிலும் பேடை கட்டினார்.


ஒருவேளை விக்கெட் விழுந்தால் களம் இறங்கலாம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடைய செயல் இருந்தது எதிர்பார்க்காத வகையில் ஒரு வீடியோவில் அவருடைய முகம் காட்டப்பட்டது. உடனே ரசிகர்கள் ஆரவாரத்தில் 'we want Dhoni' என்று மைதானம் முழுவதும் ஒலி எழுப்பி இருந்தார்கள். அந்த ஒரு நிமிடத்தில் சென்னை சேப்பாக்கத்தில் இருந்த உணர்வை ரசிகர்கள் ஏற்படுத்தினர். என்ன தான் மும்பை அணி இலவசமாக கொடி மற்றும் ஜெர்சி டி-ஷர்ட்களை கொடுத்தாலும் ரசிகர்களுடைய விருப்பமான தோனி என்று அரங்கில் முதலிடம் பெறுகிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News