Kathir News
Begin typing your search above and press return to search.

திறமைக்கேற்ப வீரர்கள் விளையாடவில்லை: பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைக்கும் கேப்டன்!

டெஸ்ட் தொடரில் திறமைக்கேற்ற வகையில் வீரர்கள் விளையாடவில்லை என்று ரோகித் சர்மா குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.

திறமைக்கேற்ப வீரர்கள் விளையாடவில்லை: பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைக்கும் கேப்டன்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 March 2023 1:24 AM GMT

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் தொடர் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் பேட்டியின்போது கூறுகிறார். குறிப்பாக தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறதாகவும் பேட்டிங்கில் நாங்கள் எங்களது திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. இது 117 ரன்னுக்குரிய ஆடுகளம் கிடையாது விக்கெட்களை இழந்ததால் போகிறன்களை எங்களால் எடுக்க முடியவில்லை.


ஆனால் இன்று எங்களுடைய நாளாக இது அமையவில்லை என்று கூறுகிறார். மேலும் ஆஸ்திரேலியா அணிகள் அணிக்காக பல்வேறு ஆண்டுகள் புதிய முறையில் சிறப்பாக பந்து வீசி வரும் பல்வேறு வீரர்கள் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்று இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு பகலாக அரங்கேறியது. டாஸ்க் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி அபாரமாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்துகிறது.


மேலும் பல்வேறு நெருக்கடி சூழலை காரணமாக இந்திய அணி சற்று பதட்டத்தை எதிர்கொண்டு இருந்தது இதன்படி கேப்டன் ரோகித் சர்மா, சுமன் கில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடி எடுத்து வைத்தார்கள். களத்தில் நிலவிய வேகத்திற்கு உகந்த சூழ்நிலையை அவர்கள் முறையாக கடைப்பிடித்தார்கள், இருந்தாலும் இந்திய அணி 117 ரன்களில் தோல்வியை தழுவி இருக்கிறது.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News