Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுவாரா!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுவாரா!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுவாரா!

Pravin kumarBy : Pravin kumar

  |  30 Dec 2020 12:07 PM GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலியா அணியை இரண்டு இன்னிங்ஸிலும் 200 ரன்களுக்கு மேல் அடிக்க வீடாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர்.இரண்டாவது இன்னிங்சில் உமேஷ் யாதவ் தனது 3.3 வீசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று தசைப்பிடிப்பு ஏற்பட்டு மைதானத்திலிருந்து ஓய்வறைக்கு சென்று விட்டார்.

ஏற்கனவே விராட் கோலி மற்றும் முகமது ஷமி இல்லாத இந்திய அணியில் தற்போது இவரும் வெளியேறியது மாபெரும் இழப்பாக இருக்கிறது. மேலும் அவர் வெளியேறிய பின்னர் மீண்டும் பந்துவீச வராததால் அவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. பி.சி.சி.ஐ யும் உமேஷ் யாதவ் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறியுள்ளது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவருக்கு பதிலாக யார் அணியில் இடம் பெறுவார்கள் என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

இதற்காக நவ்தீப் சைனி மற்றும் நடராஜன் போட்டி போடுகிறார்கள். ஒருநாள் மற்றும் டி20 தொடரின் சிறப்பான விளையாடியதால் டெஸ்ட் தொடரின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடராஜன் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசியதால் ரகானே நடராஜனை எப்போது வேண்டுமென்றால் தயாராக இருக்க வேண்டும் என்று ரஹானே ஏற்கனவே கூறியிருந்தார். அது தற்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News