Kathir News
Begin typing your search above and press return to search.

கோலியை கோபமடைய வைத்த நிருபர்! அப்படி என்ன கேட்டார் தெரியுமா ?

துபாயில் நேற்று நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

கோலியை கோபமடைய வைத்த நிருபர்! அப்படி என்ன கேட்டார் தெரியுமா ?

ThangaveluBy : Thangavelu

  |  25 Oct 2021 11:48 AM GMT

துபாயில் நேற்று நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை சேர்த்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்களை சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதனிடையே இந்த போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களுக்கு அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர், அடுத்த போட்டியில் மிக சிறப்பான பார்மில் இருக்கும் இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டு, ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா? என்று கேள்வியை எழுப்பினார்.

அதற்கு விராட் கோலி யாருமே எதிர்பார்திராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து இந்த கேள்வியை தெரிந்து கேட்டீர்களா?.. ரோகித் சர்மா போன்ற அபாரமான ஆட்டக்காரரை நீக்க வேண்டும் என்று கூறுகிறிர்களா.? என்று கேட்டு சிரித்தார். மேலும் சர்ச்சையான கேள்வியை எழுப்ப விரும்பினால் என்னிடயே முதலில் கூறிவிடுங்கள் என்றார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News