Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்கள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி: பிரம்மாண்டமாக மிக விமர்சியாக தொடங்கியது!

முதலாவது பெண்கள் பிரிமியம் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது.

பெண்கள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி: பிரம்மாண்டமாக மிக விமர்சியாக தொடங்கியது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 March 2023 1:32 AM GMT

முதலாவது பெண்கள் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று இருக்கிறது. நேற்று இரவு மிகவும் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜோசர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் பங்கேற்கும் மும்பை இந்தியன் கேப்டன் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியின் கேப்டன், டெல்லி அணியின் கேப்டன், குஜராத் அணியின் கேப்டன் என பலரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.


விழாவில் போட்டிக்கான கோப்பை அறிமுகம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. வருகின்ற 26 ஆம் தேதி வரை மும்பையில் இந்த போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பங்கேற்றக்கும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லிக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது மூன்றாவது இடத்தில் இருக்கும் அணிகள் வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். நேற்று இரவில் கோலாக்கலமாக தொடங்கியது.


இந்த ஒரு போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணி இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டது. இதில் மும்பை அணி குஜராத் அணியை வெற்றி பெற்று இருக்கிறது. அதிரடியாக விளையாடிய மும்பை அணி தற்பொழுது குஜராத் அணியை வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News