Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: நடுவராக இந்திய பெண்!

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: நடுவராக இந்திய பெண்!

ThangaveluBy : Thangavelu

  |  2 April 2022 10:13 AM GMT

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்துக்கான போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி போட்டி நடுவர்கள் குழுவில் இடம் பிடித்துள்ள முதல் பெண் என்கின்ற பெருமையை இந்தியாவை சேர்ந்தவர் பிடித்துள்ளார். இவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆண்களுக்கான போட்டியின்போது இந்த பணியை செய்துள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News