Kathir News
Begin typing your search above and press return to search.

லக்னோ அணியில் இருந்து வெளியேறிய மார்க் வுட்!

லக்னோ அணியில் இருந்து வெளியேறிய மார்க் வுட்!

ThangaveluBy : Thangavelu

  |  18 March 2022 2:06 PM GMT

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் திடிரென்று விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மார்க் வுட், கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றபோது அவரது வலது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற முடியாது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்ததுதான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலப்போட்டியில் மார்க் வுட்டை சுமார் ரூ.7.5 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது. இவர் விலகியிருப்பது அந்த அணியின் பலவீனமாக கருதப்படுகிறது.

Source: Maalaimalar

Image Courtesy: The Guardian

Next Story
கதிர் தொகுப்பு
Trending News