Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் குட்டையை குழப்பம் பாகிஸ்தான்.. இந்தியா வந்து விளையாடுறாங்களா.. இல்லையா..

மீண்டும் குட்டையை குழப்பம் பாகிஸ்தான்.. இந்தியா வந்து விளையாடுறாங்களா.. இல்லையா..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 July 2023 4:36 AM GMT

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 தற்போது இந்தியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு குளறுபடிகளை செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தற்போது மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறது. அட்டவணைகளை முடிவு செய்வதற்கு முன் தாங்கள் வருவதாக அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். தற்பொழுது இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ள வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதற்கு நாங்கள் முதலில் குழுவை அனுப்புகிறோம் என்று தற்போது கேட்டு கொண்டு இருக்கிறார்கள்.


ஏற்கனவே உலகக்கோப்பை தொடர் போட்டிக்கு பாகிஸ்தான் அணிகள் சேர்த்து போட்டிகளை ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் விளையாடுகின்றனர். இந்த நிலையில் தாங்கள் இந்திய பருவத்தில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பது இந்தியா மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்களுடைய நாட்டு அரசு அறிவித்த பிறகு தான் நாங்கள் இந்தியா வருவோம் என்றும் தெரிவித்திருந்தது.


இதன் ஒரு படியாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு இந்தியாவை கடுப்படைய வைத்திருக்கிறது. எப்படி இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிவதற்காக பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஒரு குழு ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தகவல்களை வெளியிட்டு இரக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News