Kathir News
Begin typing your search above and press return to search.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி... ஆஸ்திரேலிய பிரதமரை அழைத்து மோடி..

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வாருங்கள் என்று ஆஸ்திரேலியா பிரதமரை இந்திய பிரதமர் மோடி அழைத்து இருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி... ஆஸ்திரேலிய பிரதமரை அழைத்து மோடி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 May 2023 3:31 AM GMT

பத்து அணிகள் இடையிலான மூன்றாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவின் உள்ள பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளி பட்டியலில் இடங்களில் பிடித்த அணிகள் இடம் பெற்று இருக்கிறது. குறிப்பாக இந்த போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா நேரடியாக தகுதி பெற்று இருக்கிறது. மீதமுள்ள இரண்டு அணிகளுக்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்பட்ட இருக்கிறது.


இந்த போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு சுற்றுப்பயணங்களுக்காக வெளிநாடு சென்று இருக்கிறார். அதன் காரணமாக ஆஸ்திரேலியா பிரதமரை இந்தியாவிற்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். தகுதி சுற்று போட்டிகளில் விளையாடும் அணிகளின் பட்டியல் மற்றும் அதற்கான அட்டவணை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் 18ம் தேதி ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கிறது.


இந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டும்தான் இறுதிப்போட்டிக்குள் அடி எடுத்து வைப்பதுடன் உலகப்பொட்டிக்கு தகுதி பெறும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. உலக கோப்பை போட்டு என்பது அனைத்து வீரர்களின் நிச்சயமாக இருக்கும் அதற்காக இந்திய வீரர்களும் அதற்கான பயிற்சி தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்தியா நிச்சயம் உலக கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

Input &Image courtesy:Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News