Kathir News
Begin typing your search above and press return to search.

சாதி ரீதியான பேச்சு: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!

சாதிய வன்மத்துடன் பேசியதாக போடப்பட்ட வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதி ரீதியான பேச்சு: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  18 Oct 2021 2:58 AM GMT

சாதிய வன்மத்துடன் பேசியதாக போடப்பட்ட வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் உடன் பேசியபோது, சாதி ரீதியிலான சில வார்த்தைகளை யுவராஜ் சிங் பயன்படுத்தப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு வந்தது. அதிலும் பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில் ஹரியானா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை கைது செய்ததாகவும் சில மணி நேரத்திற்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் ஹரியானா மாநில காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்கு முன்னரே தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக யுவராஜ் சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: India Tv


Next Story
கதிர் தொகுப்பு
Trending News