Kathir News
Begin typing your search above and press return to search.

பழனியில் சிவலிங்கத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - போலீஸ் விசாரணை!

பழனியில் சிவலிங்கத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - போலீஸ் விசாரணை!

ParthasarathyBy : Parthasarathy

  |  3 Jun 2021 7:34 AM GMT

பழனியில் இருக்கும் கோதைமங்கலத்தில் உள்ள பாப்பான் குளக்கரை கோயிலில் இருக்கும் சிவலிங்கத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

பழனி அருகே கோதைமங்கலம் பகுதியில் பெரியாவுடையார் கோயில் உள்ளது. அங்கு செல்லும் வழியில் பாப்பான் குளக்கரையில் சிவலிங்கம், நந்தி, கன்னிமார்,கருப்புசாமி கோயில் உள்ளது. இன்று காலை அங்கு இருந்த சிவலிங்கம் முற்றிலுமாக சேதமடைந்தது, உடைந்த லிங்க பகுதியின் பாகம் அங்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக காவல் துறையினரிடம் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரீக்ஷித் சார்பாக மாவட்ட செயலாளர் செந்தில் குமார் கூறுகையில் "கோதைமங்கலம் குளத்துக்கரையில் இருக்கும் சிவலிங்கத்தை சமூக விரோதிகள் திட்டமிட்டு சேதப்படுத்தி உள்ளனர். அவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News