Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் விழிப்புணர்ச்சி.!

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் விழிப்புணர்ச்சி.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Jun 2021 6:11 PM IST

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக நம்முடைய சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாளை கொண்டாடுவதை முன்னிட்டு, கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக உறுதி மொழி ஏற்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட, இந்த இயக்கம் தற்போது முயன்றுள்ளது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், குணியமுத்தூர், காந்திபுரம், கரும்புகடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. குறிப்பாக இந்த கொரோனா கால ஊரடங்கு பல மாணவர்களை வேலைக்கு போகும் ஒரு சூழ்நிலையை பொருளாதாரம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது குறிப்பாக ஏழை குடும்பங்களில் இருக்கும் மாணவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதன் காரணமாக இந்த வருடம் கிராமப்புறங்களில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு முறையை கொண்டு வரவேண்டும்.


இதில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "கல்வி பயின்று மிளிரவேண்டிய குழந்தை பருவத்தில் வேலைக்கு சென்று பளுவினைச் சுமக்கும் குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய தமிழக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருவதாக கூறிய அவர்,சமுதாயத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்க பல்சமய நல்லுறவு இயக்கம் முன்வரும்" என்று அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News