Kathir News
Begin typing your search above and press return to search.

கூட்டணி எம்.எல்.ஏ இப்படி செய்யலாமா? 'கொங்குநாட்டு முதல்வரே' என்ற சுவர் விளம்பரத்தால் தி.மு.க அதிர்ச்சி!

கூட்டணி எம்.எல்.ஏ இப்படி செய்யலாமா? கொங்குநாட்டு முதல்வரே என்ற சுவர் விளம்பரத்தால் தி.மு.க அதிர்ச்சி!

ParthasarathyBy : Parthasarathy

  |  17 July 2021 10:24 AM GMT

தமிழகத்தின் உள்ள மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை தனியாக பிரித்து "கொங்கு நாடு" என்று உருவாக்கி தனி யூனியன் பிரதேசமாக அதை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த பகுதியில் உள்ள மக்கள் தற்போது தொடர்ந்து எழுப்புகின்றனர். இந்த கோரிக்கையை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியில் இருக்கும் சிலர் இதை எதிர்த்து வந்தாலும், கொங்கு மண்டலத்தில் உள்ள கட்சிகள் மற்றும் அங்கு இருக்கும் மக்கள் கொங்கு நாடு என்ற கோரிக்கையை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். அது மட்டுமின்றி தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கொங்கு மண்டலத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு மக்களிடையே வலுவாக இருக்கிறது.


இவ்வாறு இருக்கையில் தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அங்கம் வகித்து இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. மேலும் இந்த கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் 'உதயசூரியன்' சின்னத்தில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு, அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தி.மு.க கட்சியின் கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கு அந்த கட்சியின் தொண்டர்கள் 'கொங்குநாட்டு முதல்வரே' என்று பட்டம் சூட்டி கோவை மாவட்டத்தில் சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர். ஏற்கனவே திமுக கட்சி இந்த 'கொங்கு நாடு' கோரிக்கையை எதிர்த்து வரும் நிலையில், தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சி கொங்கு நாடு கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் சுவர் விளம்பரம் எழுதியது பெரும் சர்ச்சையாகி வருகிறது.


சில தினங்களுக்கு முன்பு தான் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தை இல்லாமல் இருந்ததால் தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என்ற சர்ச்சையில் ஈஸ்வரன் சிக்கினார். இவரது பேச்சுக்கு பல பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது கொங்கு நாடு கோரிக்கை குறித்த சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News