Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் வீடு முன்பு ஒருவர் தீக்குளிப்பு!

சென்னையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் வீடு முன்பு ஒருவர் தீக்குளிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  27 Sep 2021 6:34 AM GMT

சென்னையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீக்காயம் அடைந்தவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வெற்றிமாறன் 43 என தெரியவந்துள்ளது. இவர் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இவரது வேட்புமனு நிராகரிப்பு செய்த காரணத்தினால் தனக்கு நீதி வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ளார்.

மேலும் ஸ்டாலின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு சென்று சந்திப்பதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News