Kathir News
Begin typing your search above and press return to search.

மதுபோதையில் அங்கன்வாடிக்கு வந்து வாசலிலேயே மயக்கம் போட்ட சமையலர்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அங்கன்வாடி சமையல் ஊழியர் மதுபோதையில் பணிக்கு வந்து அங்கன்வாடி வாசலிலேயே மக்கம் போட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் அங்கன்வாடிக்கு வந்து வாசலிலேயே மயக்கம் போட்ட சமையலர்!

ThangaveluBy : Thangavelu

  |  22 Dec 2021 3:18 PM GMT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அங்கன்வாடி சமையல் ஊழியர் மதுபோதையில் பணிக்கு வந்து அங்கன்வாடி வாசலிலேயே மக்கம் போட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ளது அரியதிடல் என்ற கிராமம். இந்த கிராமத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வரும் நிலையில் சமையல் பணியில் மீனாட்சி என்பவர் ஈடுபட்டு வருகின்றார். இவருக்கு மது பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த மாதம் மதுபோதையில் பணிக்கு சென்றபோது, அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதும், எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர். ஆனால் அன்று முதல் பணிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் புதன்கிழமை அங்கன்வாடி பணிக்கு வந்துள்ளார். அப்போது தள்ளாடிய நிலையிலேயே பணிக்கு வந்துள்ளார். அப்போது வாசல் நுழையகூட முடியாமல் அங்கேயே மயக்கம் போட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியே வந்துள்ளது. மயக்கம் போட்டவரிடம் ஆசிரியர்கள் பேச்சு கொடுத்தும் எழாமல் மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். ஒரு அரசு ஊழியர் பணிக்கு வரும்போது மதுபோதையில் வருவது மற்ற ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News