Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்துமஸ் தினத்தில் குழந்தைகள், பெண்களை மதமாற்றம் செய்த மிஷனரிகள்: காவல் நிலையத்தில் புகார் அளித்த இந்து பிரமுகர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து குழந்தைகள் மற்றும் பெண்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றம் முயற்சியை தடுக்க சென்ற இந்து பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த மிஷனரிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தில் குழந்தைகள், பெண்களை மதமாற்றம் செய்த மிஷனரிகள்: காவல் நிலையத்தில் புகார் அளித்த இந்து பிரமுகர்!

ThangaveluBy : Thangavelu

  |  27 Dec 2021 12:45 AM GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து குழந்தைகள் மற்றும் பெண்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றம் முயற்சியை தடுக்க சென்ற இந்து பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த மிஷனரிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக இந்துக்களை மட்டும் தேர்வு செய்து கிறிஸ்துவ மிஷனரிகள் மதமாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அது போன்றவர்களை இந்து மக்கள் கட்சி தடுத்து வருகின்றது. இருந்தபோதிலும் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மதமாற்றும் வேலையில் மிஷனரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் இந்துக் குழந்தைகள் மற்றும் பெண்களை மதமாற்றும் வேலையில் மிஷனரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒன்றியத் தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் தடுக்க முயன்றபோது மிஷனரிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனிடையே ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News