Kathir News
Begin typing your search above and press return to search.

போலீஸ் துறையின் கண்ணியம் குறையாமல் பணியாற்றுவோம்: டி.ஜி.பி. சைலேந்திர பாபு கடிதம்!

தமிழகத்தில் போலீஸ் துறை மீதுள்ள கண்ணியம் குறையாமல் பணியாற்றுவோம் என்று டிஜிபி சைலேந்திர பாபு போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

போலீஸ் துறையின் கண்ணியம் குறையாமல் பணியாற்றுவோம்: டி.ஜி.பி. சைலேந்திர பாபு கடிதம்!

ThangaveluBy : Thangavelu

  |  2 Jan 2022 1:38 PM GMT

தமிழகத்தில் போலீஸ் துறை மீதுள்ள கண்ணியம் குறையாமல் பணியாற்றுவோம் என்று டிஜிபி சைலேந்திர பாபு போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2021ம் ஆண்டில் பல்வேறு சவால்களை தமிழக போலீசார் தைரியமாக எதிர்கொண்டுள்ளனர். இத்துறையில் ஆண், பெண் அதிகாரிகள் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் அரண்போல் நின்றதால் சாத்தியமானது.

மேலும், தமிழகத்தில் குற்றங்களை தடுக்கின்ற நோக்கத்திலும், குற்றவாளிகளை ஒடுக்கவும் இடைவிடாமல் பணியாற்றுவோம். போலீசார் பணியால் அமைதியை நிலைநாட்டுவோம். காவல்துறையின் கண்ணியம் குறைவின்றி அனைவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News