Kathir News
Begin typing your search above and press return to search.

ராணிப்பேட்டையில் கோயில் சிலைகள் சேதம்!

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் மிகவும் பழமையான கோயிலில் சிலைகள் மற்றும் சூலத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டையில் கோயில் சிலைகள் சேதம்!

ThangaveluBy : Thangavelu

  |  4 Jan 2022 6:18 AM GMT

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் மிகவும் பழமையான கோயிலில் சிலைகள் மற்றும் சூலத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே அத்திப்பட்டு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த துர்க்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இதனிடையே கடந்த 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் கோயிலை இரவு பூசாரி பூட்டிவிட்டு வீட்டுக் சென்றுள்ளார்.

அதே போன்று நேற்று முன்தினம் கோயிலுக்கு பூசாரி சென்று பார்த்தபோது, அங்கு இருந்த சாமி சிலைகள், சூலம் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி சம்பவம் பற்றி காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinamalar

Image Courtesy:Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News