Kathir News
Begin typing your search above and press return to search.

பக்தர்களை கைது செய்துவிட்டு ஆஞ்சநேயர் கோயிலை இடித்து தள்ளிய தி.மு.க. அரசு!

பக்தர்களை கைது செய்துவிட்டு ஆஞ்சநேயர் கோயிலை இடித்து தள்ளிய தி.மு.க. அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  10 Jan 2022 3:26 PM GMT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலை திமுக அரசு இடித்து தள்ளியிருப்பது இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் அடையாறு கால்வாய் அருகில் ஆஞ்சநேயர் கோயிலை பக்தர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டியுள்ளனர். இதனிடையே நீதிமன்றம் கோயிலை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் கோயிலை இடிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் பக்தர்களை கைது செய்துவிட்டு கோயிலை முழுவதும் இடித்து தரைமட்டமாக்கினர். இந்த சம்பத்தால் அப்பகுதியில் இந்துக்கள் குவிந்து சோகத்துடன் பார்த்து விட்டு செல்லும் நிலையை திமுக அரசு உண்டாக்கியுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News