Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சிலையை சேதப்படுத்திய இளைஞர் கைது!

விநாயகர் சிலையை சேதப்படுத்திய இளைஞர் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  12 Jan 2022 6:57 AM GMT

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி கத்தாளகுரும்பபட்டி கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலின் சிலையை சேதப்படுத்திய இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ளது தென்னம்பட்டி கத்தாளகுரும்பபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிலையை அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் 24 என்ற இளைஞர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிசாமி என்பவர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.

Source: Dinamani

Image Courtesy:Image Courtesy: Remote Old Temples

Next Story
கதிர் தொகுப்பு
Trending News