Kathir News
Begin typing your search above and press return to search.

கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய உத்தரவு!

கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய உத்தரவு!

ThangaveluBy : Thangavelu

  |  14 Jan 2022 7:22 AM GMT

15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுக்கின்ற வகையில் நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில் 15 முதல் 18 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதனை அனைவரும் கடைப்பிடிக்க வலியுறுத்தி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் நலன் கருதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கூடுதல் நேரம் வகை நூலகங்களை திறக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: The Economic Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News