Kathir News
Begin typing your search above and press return to search.

பணிமுடித்து வீட்டுக்கு சென்ற பெண் போலீசின் தாலிச் செயினை பறித்த வாலிபர் கைது!

பணிமுடித்து வீட்டுக்கு சென்ற பெண் போலீசின் தாலிச் செயினை பறித்த வாலிபர் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  22 Jan 2022 9:53 AM GMT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த ஒரு பெண் காவலரின் தாலி செயினை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் சத்யா. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், அவரை மரக்காணம் அருகே எதிரில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பெண் போலீசின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இது தொடர்பாக பெண் போலீஸ் சத்யா, புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று இரவு (ஜனவரி 21) திண்டிவனம் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், பெண் போலீசின் தாலிச் செயினை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து தாலிச் செயினை போலீசார் மீட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News