Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டி வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க மாபெரும் உண்ணாவிரதம்!

தஞ்சை மாணவி  தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டி வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க மாபெரும் உண்ணாவிரதம்!

DhivakarBy : Dhivakar

  |  25 Jan 2022 6:10 AM GMT

"கட்டாய மத மாற்றத்தால் தற்கொலை செய்து கொன்ட தஞ்சை மாணவிக்கு நீதி வேண்டி, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க மாபெரும் உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறது.


தஞ்சையில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி என்ற கிறிஸ்தவ பள்ளியில் பயின்று வந்த இந்து மாணவியை, அப்பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றத்திற்க்கு வற்புறுத்தியதால், அம் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. "உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


"இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு நீதி வேண்டி இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" என்று தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இவ் உண்ணாவிரத நிகழ்வில் கட்சி நிர்வாகிகளும், பெருந்திரளான மக்களும் பங்கேற்று வருகின்றனர்.






மாணவியின் தற்கொலைக்கு நீதி வேண்டுமானால் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். என்பதே அனைவரது கருத்தாகவுள்ளது.

BJP TamilNadu



Next Story
கதிர் தொகுப்பு
Trending News