பா.ஜ.க நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு வரும் பொதுமக்களை, தடுக்கிறதா தி.மு.க அரசின் காவல்துறை?
By : Dhivakar
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி வேண்டி, நடத்தப்படும் பா.ஜ.க'வின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, கலந்துகொள்ள வரும் பொதுமக்களை காவல்துறை தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சையில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி என்ற கிறிஸ்தவ பள்ளியில் பயின்று வந்த இந்து மாணவியை, அப்பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றத்திற்க்கு வற்புறுத்தியதால், அம் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பேசுபபொருளாகியுள்ளது. "உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
"இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு நீதி வேண்டி இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" என்று தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
இவ் உண்ணாவிரத நிகழ்வில் கலந்துக் கொள்ள வரும் பொது மக்களையும், கட்சி நிர்வாகிகளையும், தி.மு.க அரசின் காவல் துறை தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.