Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடிக்கக்கூடாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி!

கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அது பற்றிய நடவடிக்கையை எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடிக்கக்கூடாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி!

ThangaveluBy : Thangavelu

  |  9 Feb 2022 6:36 AM GMT

கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அது பற்றிய நடவடிக்கையை எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, திரிசூலத்தில் அமைந்துள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களிடம் இருந்து உடனடியாக மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக பிப்ரவரி 3ம் தேதி வந்தது. அப்போது கோயில் அதிகாரியின் செயலுக்கு நீதிபதிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தும் அதனை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என மேற்கோள் காட்டினர். கோயில் சொத்துக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர் என்று கண்டனத்தை பதிவு செய்தனர். கடமையை செய்யாத அலுவலர்களின் சம்பளத்தை பிடிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source: Dinamani

Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News